
இங்கு பிரதான தொழிலாக மக்கள் விவசாயத்தினை செய்துள்ளார்கள். ஆனால் யுத்த காலத்திற்கு பின்னர் இந்தப்பிதேசம் மிகவும் பற்றைகளும் காடுகளுமாக காணப்படுகிறது. மக்களின் வீடுகளும் இடிந்த நிலையில் காணப்படுகிறது. இப்பிரதேசம் இப்போது மக்களின் மீள்குடியேற்றத்திறிகாக அரசினால் தீர்மானிக்கப்பட்டு கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. கண்ணி வெடிகள் இல்லை என்று இனங்காணப்பட்ட பகுதிகளில் மக்கள் சென்று தமது காணிகளையும் வீடுகளையும் பார்வையிடுவதோடு சிலர் தமது காணிகளில் வளர்ந்துள்ள பற்றைகளை அகற்றி மீண்டும் குடியேறுவதோடு விவசாயத்தினையும் செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளிகின்றனர், இன்னும் சிலர் உடைந்த தமது வீடுகளை மீண்டும் திருத்தி அமைத்து வருகின்றனர்.
இங்கு மக்களின் மீள்குடியேற்றத்திற்காக ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் ராணுவத்தினரின் முகாம்கள் இன்னமும் இருக்கின்றன. மக்களின் நடமட்டங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. வீதிகளும் புணரமைக்கப்பட்டு வருகின்றது. முழுமையாக மிதிவெடிகள் இன்னமும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment