News Update :
Home » » ஈழத்தின் விடுதலை வரலாறும் உயிர் தியாகங்களும்!

ஈழத்தின் விடுதலை வரலாறும் உயிர் தியாகங்களும்!

Penulis : anpusanthosh on Thursday, October 10, 2013 | 12:08 AM

தாயகமக்களது நம்பிக்கை வழி தொடர்ந்து தம்மை நிரூபித்து வரும் நிலையில் இந்தியாவைமட்டுமல்ல சர்வதேசம் கூட எமது நியாயத்திற்கு நீதிவழங்க வேண்டும் என்பதானால் நாம் எம்மை அடையாளம் காண வேணடும் அந்த வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதற்கான தேவைகளை புலம் பெயர் சமூகம் உணர வேண்டும் அதற்கான தலமைத்துவத்தை தெரிவாக்க வேண்டும். அதுவே காலத்தின் அவசியம். அதனை நாம் ஏற்கத்தவறும் ஒவ்வொரு சந்தற்பமும்தான் முள்ளிவாய்கால் அவலத்திற்கான காரணம்.

  
கருணா மாறியமைக்காக கருணாவின் செயல்பாட்டை வழிநடத்தியவர்கள்தான் ஆபத்தானவர்கள் . கூட்டமைப்பை விமர்சிக்கும ஊடகம் தொட்டு கூட்டமைப்பு தோற்று ஒரு சந்தற்பத்தை எதிர்பார்க்கும் தமிழர்களால் தமது செயல்பாடுகளை முன்னிறுத்துவதானது ஈழத்தின் விடுதலைக்கானதல்ல. அதனால் காலம் தந்த போராட்டவழிகளை சமூகம் ஏற்பதற்கு இவர்கள் தடையாக செயல்படாதவரை இந்தியாவோ சர்வதேசமோ எமது இனத்தின் சுதந்திரத்தை மறுக்க முடியாது.

இலங்கை அரசாங்கத்திற்கு கட்டாயத்தின் பேயரால் குரல் கொடுப்பவர்களும் காலத்தின் விதியால் குரல்கொடுப்பவர்களாகவும் இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கை வழி புலம் பெயர் தேசத்து அறிவாளிகளில் அரசாங்கம் வைத்திருக்கும் போது அதனை அடையாளம் காணப்படாமல் இருப்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வளர்க்க சமூகத்தில் நம்பிக்கை அற்ற நிலை அதனால் வரும் தேர்தல் வெற்றி தோல்விக்கு அப்பால் நா.க.த.அரசாங்கம் என்ன அதனை வளர்கப்படவேண்டிய தேவை என்ன எனும் அளவிற்குஅமைப்பக்களால் நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் எதிர்காலத்தில் தடுகப்பட வேண்டும்.
காரணம் சர்வதேச அரசியல் நகர்வை தடைப்படுத்தி அமைப்புக்களை வளர்த்து எதிர்கால சமூகத்தில் ஒரு முள்ளிவாய்கால் அவலம் தடுகப்பட்டமைக்கு முக்கிய காரணம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஒரு சரியான அரசியல் தீர்வை கையளிப்பதற்கான வலுவான பக்கத்தை நா..க.தமிழீழ அரசாங்கம் மூலம் வளர்கப்படாதமைதான் கூட்டமைபிற்கான பின்னடைவாகவும் உள்ளது என்பதனை தமிழினம் புரிய மறுக்கும் வரை அன்றைய நிலையில் ஏற்பட்ட தவறுகள் இன்றைய நிலைவரைக்கும் காரணமாக அமைந்தது போல் இன்றைநிலை தொடராமல் பாரத தேசம் முடிவுகளை எடுக்கும் காலம் அமைய வேண்டும். அதன் அடிப்படையில் உண்ணாவிரதம் இருக்கும் தோழர் தியாகு அவர்களது கோரிக்கையை ஏற்று இராணுவத்தை வடமாணத்தை விட்டு வெளியேற்றி அலகின் அடிப்படையில் தமிழினத்தின் தனித்துவமான பாதுகாப்பிற்கான தீர்வை வழங்காமல் எப்படி இலங்கையில் நடைபெறும் சர்வதேச மாநாட்டிற்கு இந்தியா செல்ல முடியும் ? அதுவே இந்திய அரசாங்கத்திற்கான சவாலாகவும் சந்தற்பமாகவும் அமைந்துள்ளது. இந்தியாவினது சதியும சர்வதேசத்தின் சந்தற்பவாதமும் மட்டுமல்ல ஈழத்தமிழினத்தின் எதிர்பார்புகளாக ஒன்று பட்ட நிலையில் சர்வதேச அரசியல் நகர்வை இந்தியாவை பகைப்பதில் காட்ட வேண்டியதல்ல. எமது விடுதலைக்காக ஒரு தமிழராக கூட நம்பிக்கை கொள்ள முடியாத நிலையில்தான் கூட்டமைப்பினதும் நா.க..தமிழீழ அரசாங்கத்தினதும் தேவைகளை ஆராயப்பட முடியும்.

சிங்களத்தில் சிறை இருந்து வஞ்சகத்தில் மீது வளர்ந்து காலத்தை வென்ற காவிய நாயகர்களையும் அதனை மறந்தும் மறவாமலும் வாழும் எத்தனையோ போராளிகள் பலர் இன்றும் வாழும் போது எதிர்காலம் பற்றிய புரிதல்களுக்கு அமைய செயல்பட வேண்டியது கடமை. ஆனால் அதற்கான சந்தற்பங்கள் என்பது கூட அன்றும் போல் இன்றும் வீரவசனங்களின் விளைநிலமாக இன்னமும் மீடகப்படவில்லை. அதற்கான காலத்தை உருவாக்கி ஈழத்தின் விடுதலைப்பாதை வரலாற்றின் அடிப்படையில் மீண்டும் தன்னை நிரூபித்துள்ள நிலையில் அதற்காக போராட வேண்டியதும் ஈழத்தமிழினத்தின் கடமை மட்டுமல்ல உலகத்தமிழினத்தின் கடமை ஆகும் .

அந்த வகையில் ஒரு உண்மை விசுவாசமான போராளியாக மட்டும் இருந்தால் போதும் அவர்கள் சகாவரம் பெற்றவர்களாக வாழ்விலும் சாவிலும் சாதனை ஆளர்களாக ஈழத்தின் விடுதலைப்பாதை நகரும் என்பதே காலத்தின் நம்பிக்கை. அவர்களுக்காக எம்மினம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்..
இதனை சங்கர் அண்ணா தீலீபன் அவர்களை மட்டுமல்ல இத்தனை ஆயிரம் மாவீரர்களைப்பற்றி சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடிய பன்னிரு வேங்கைகள் மட்டுமல்ல மதிப்பிற்குரிய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் கூட இருந்து எதனையும் சாதிக்க முடியும் என்பதனை விட அவர்கள் இறந்து பலருக்கு சந்தற்பம் அளித்துள்ளார்கள் ஈழவிடுதலை வரலாற்றினது உண்மைநிலையினை தெளிவுபடுத்த. (வாழ்வில் ஒருநாள் பயணம் அது )
இவர்கள் யாரது இழப்பும் 2007 ம்ஆண்டுவரை எமது விடுதலைக்காக சிந்திக்க வேண்டி எந்தச் சந்தற்பமும் உறுத்தவில்லை .எமது விடுதலைப்பாதையின் ஆழமும் அகலமும் அறிய சுயநலத்திற்காக புறப்படவில்லை . சுயசிந்தனைக்கு பலவிடயங்கள் ஆரம்பமானது 26.4.2007 ஈழத்தின் விடுதலைக்காக ஆராய இத்தனை சந்தற்பத்தையும் தந்துள்ளதென்றால் எதிர்காலம் பற்றி நாம் உண்மைக்கு மதிப்பக் கொடுக்கும் எதிர்காலத்தை தேடி நாம் என்றும் பயணிக்க வேண்டும் என்பதே உண்மை ஆகும்.


காரணம் எதிரியிடம் இருந்து உயிர் தப்புவதனைவிட துரோகி என்பதற்கான பாத்திரத்தில் இருந்து தவறுவதானது அதனைவிட ஆபத்தானது. ஒரு போராளியாக விடுதலையை நேசித்து போராடத்தை நேசித்து புலம் பெயர் தேசத்தில் போராடத்திற்கு அப்பால் பங்களிப்புக்களை தொடர்ந்து பங்களித்து சமாதானகாலத்தில் வந்தவர்களை வரவேற்றால் அதுகூட ஆபத்தானது.
. ஈழத்தின் விடுதலைப்போராடம் எதிரியால் வளர்கப்பட்டு துரோகியால் அடையாளம் காணப்பட்டு உண்மை மனிதர்காளால் ஈழத்தின் விடுதலை வரலாறு நிர்ணயிக்கப்படுவதனை யாராலும் தடுக்க முடியாது என்ற பக்குவத்தை எதிர்கால சமூகம் ஏற்றாக வேண்டும். என்பதே மாவீரர்களுக்கான கடமை மட்டுமல்ல இதனை அறிந்தும் அறியாமலும் உள்ள போராளிகளினது கடமையும். . வையகம் போற்றி வரலாறு வாழ்த்த வேண்டிய ஈழவிடுதலை வரலாற்றை எதிரியாலோ துரோகிகளாலோ அடையாளம் காண முடியாது என்பதனை இந்த வையகம் அடையாளம் கண்டுள்ளது.
அதனால் அத்தனை சந்தற்பங்களையும் தனதாக்கிகொண்டதே ஈழத்தின் விடுதலை வரலாறு என்பதனையும் அத்தனை உயிர் தியாகங்களும் தோற்க்க முடியாதவை என்பதனையும் ஈழத்தமிழினம் மட்டுமல்ல உலகத்தமிழினமும் உண்வழிகளில் உணர்ந்து கொண்டால் எதிரிக்காகவும் துரோகத்தனங்களுக்காகவும் பயப்படத் தேவையில்லை என்பதனை வரலாறு மட்டுமல்ல வன்னிமண்ணும் அடையாளப்படுத்திவருவதனை எதிர்கால சமூகம் புரிய வேண்டும்.


சாவு என்பது எதிர்பார்க்க முடியாத இலக்கு அல்ல அதனை தீர்மானித்து ஏற்றுக் கொண்டஎமது விடுதலை வரலாற்றினை நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய பலபக்கம் உள்ளது. அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதனைவிட தோல்விகளால் விடுதலைகான எதிர்காலத்தை பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவிலிருந்து நோர்வே வரை உலகத்தில் அனைவரலாலும் மட்டுமல்ல தமிழினத்தால் கூட தமிழீழ விடுதலை ஏமாற்றப்பட்ட தனை ஈழத்தமிழினமாகிய நாம் சரியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும: மாவீரர்களும் போராளிகளாகவும் எமது விடுதலை வரலாற்றில் தோற்க்க முடியாத நகர்வை நாம் அடையாளம் காணப்பட வேண்டுமானால் நாம் எம்மில் இருந்து இறைவன் வரை அடையாளம் காணப்பட வேண்டும். அதுவே ஈழத்தின் விடுதலை வரலாறும் உயிர் தியாகங்களும்.
-சுவிஸ் தயா-
Share this article :

Post a Comment

nn

nn

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger